நான் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன். காரணம் மக்களை மேம்படுத்த யார் அரசியலுக்கு வேண்டுமானாலும் வரலாம். உங்களது சித்தாந்தத்தை சொல்லுங்கள் நான் இந்த மாதிரி செய்ய இருக்கிறேன் என தெரிவியுங்கள் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதனால் யாரும் அரசியலுக்கு வருவதற்கு தடையாக இருக்கக் கூடாது. மக்களுக்கு சாய்ஸ் இருக்க வேண்டும். தமிழகத்தில் மூன்று கட்சிகள் இருப்பதற்கு பதிலாக ஆறு கட்சிகள் இருந்தால் நல்லது தான். புதியவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் சிஸ்டம் ஷேக் ஆகும். பழையவர்களை 30 வருடம் 40 வருடம் ஆட்சியில் இருந்தால் நன்றாக இருக்காது.
நீரோடை போன்று ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். *நடிகர் விஜய் உள்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். தமிழக மக்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும்.*
